×

பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; இந்திய வீரர் பலி

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்படுகிறது. கடந்த 13ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உட்பட 11 பேர் பலியாகினர்.

இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் நவுசாரா எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர் சங்ராம் சிவாஜி வீரமரணமஅடைந்தார். மற்றொரு வீரர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர். அதிகாலை 1 மணி முதல் நேற்று காலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.

Tags : Pakistan ,firing ,player ,Indian , Pakistan firing; Indian player killed
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி