×

நாய் உடல், மனிதமுகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

சாயல்குடி: சாயல்குடி அருகே நாய் உடல் மற்றும் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஓடைக்குளத்தை சேர்ந்தவர் அமானுல்லா. இவர் வீட்டில் வெள்ளாடுகளை வளர்ந்து வருகிறார். அதில் ஒரு ஆடு சினையாக இருந்தது. இந்த ஆடு நேற்று ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டிக்கு நாய் போன்ற உடலும், மனித முகம் போன்றும் இருந்தது. கால்கள் இல்லை. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் வந்து பார்த்து சென்றனர். ஆனால் பிறந்த சில மணி நேரத்திலேயே ஆட்டுக்குட்டி இறந்து போனது. இதையடுத்து அப்பகுதிலேயே புதைக்கப்பட்டது.

Tags : Goat
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...