சென்னை: சென்னை விமான நிலைய சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்ற அமித்ஷாவை நோக்கி பதாகை வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமித்ஷாவை நோக்கி பதாகையை வீசியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.