சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா விளக்கம் அளித்துள்ளார். பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுரைகளே, பல்கலைக்கழகங்களே அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.