திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராம சுடுகாடு அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நைட்டி அணிந்து, தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அங்கு சென்று, பெண்ணின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் அருகில் பீர் பாட்டீல்கள் கிடந்தன.
இந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.