×

காதல் மனைவி மர்ம சாவு?: கணவனிடம் போலீசார் விசாரணை

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி அடுத்த பழவேற்காடு அருகேயுள்ள தோனிரேவு  கிராமத்தைச் சேர்ந்தவர் நைனியப்பன். இவரது மகள்  சிவரஞ்சனி (23).  காட்டாவூர்  பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (25) தனியார் நிறுவன ஊழியர்.  இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
 இந்நிலையில், திருப்பாலைவனம் கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர்.  மனைவியிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கணவர்  துன்புறுத்தியுள்ளார். இதுபற்றி சிவரஞ்சனியின் பெற்றோர்   சமரசம்  செய்து வைத்துள்ளனர். ஆனால்  தற்போது திடீரென அவர் வீட்டில் மர்மமான முறையில் சிவரஞ்சனி இறந்து கிடந்துள்ளார்.

திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் சிவரஞ்சனியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்  புகாரளித்தனர். போலீசார் சிவரஞ்சினியின் சடலத்தை  மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளதால்  பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



Tags : death , Mysterious death of romantic wife ?: Police interrogate husband
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...