புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருமயத்தில் கவிஞர் சினேகன் கார் மோதி காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் அருண்பாண்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 15ம் தேதி சவேரியார்புரத்தில் சினேகன் ஒட்டிச் சென்ற கார் மோதியதில் இளைஞர் அருண்பாண்டி காயம் அடைந்தார்.