×

மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள்..பேரறிவாளனுக்கு விடுதலை தாருங்கள் : இயக்குனர் பாரதிராஜா!!

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கக்கோரி இயக்குனர் பாரதி ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்படாத பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவரை வெளியே எடுக்க தாயார் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர்கள் பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல தமிழ் திரையுலகினர் குரல் எழுப்பி வரும் நிலையில், தற்போது இயக்குனர் பாரதிராஜாவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை.. ஆளுநர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும் , தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக , ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி ஒரு விடியற்காலை பொழுதுக்காக கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது.. மதிப்புக்குரிய ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள்..உடனே விடுதலை தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Bharathiraja , Perarivalan, Director Bharathiraja, Letter
× RELATED பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே...