சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானாமதுரையில் 2016ம் ஆண்டு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதனையடுத்து, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் விபின் குமாருக்கு குழந்தைகள் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.