டெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நக்ரோடாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். மும்பை தாக்குதல் போன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம் என தகவல் வெளியான நிலையில் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், உளவுத்துறையுடன் இந்த ஆலோசனையானது நடைபெறுகிறது.