கோவை: தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே வேல் யாத்திரை நடத்தப்படுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கட்சியை பலப்படுத்துவது மட்டுமல்ல, தமிழகத்தின் சிறப்பை நாடு முழுவது எடுத்து செல்வேன். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதையே நான் மாற்றமாக பார்க்கிறேன் எனவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.