சென்னை: அவதூறு வீடியோக்களை வெளியிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார்கவுன்சில் தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்ணன் அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கர்ணன் வெளியிடும் வீடியோக்கள் வலைத்தளங்களில் பரவி வருவதால் நீதிமன்றத்தின் மாண்பு குலைகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது.