சென்னை: அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு விசாரணையின் போது காணொலியில் 100க்கும் மேற்பட்டோர் வந்ததால் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் வந்ததால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அதிருப்தி தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையை கவனிக்க 100க்கும் மேற்பட்டோர் காணொலியில் குவிந்தனர். மாணவர்களின் பேச்சு, வீடுகளில் தொலைக்காட்சி ஒலி போன்ற இடையூறுகள் ஏற்பட்டதால் விசாரணை நிறுத்தப்பட்டது.