புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்தவர் சேசு (35). இவர், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பழக்கப்படுத்தி கொண்டு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாய், கடந்த 2018 ஜூன் 30ம்தேதி திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார், சேசுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக 3சட்டப்பிரின் கீழ் ஒவ்வொரு சட்ட பிரிவிற்கும் தலா 5வருட சிறைத்தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இருந்து நிவாரண தொகையாக ரூ.1லட்சம் வழங்க வேண்டும் என்று நேற்று தீர்ப்பு அளித்தார்.