சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னரே திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.