சென்னை: தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்வுக்கு பிந்தைய செலவுகள் கணக்கிடப்படுவது எப்படி? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது குறித்து வருகின்ற 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை ஆகஸ்டில் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.