தர்மபுரி: தர்மபுரியில் விவசாய கிணற்றில் விழுந்த குட்டி யானையை மீட்க 12 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். கிணறு குறுகலாக இருப்பதால் தொடர்ந்து முயற்சி நடைபெற்று வருகிறது. யானையை உயிருடன் மீட்க வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி இரவு வரை தொடரும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.