×

தங்கக்கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் தர நெருக்கடி!: சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிக்குமாறு அழுத்தம் தரப்படுவதாக சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள அடக்குமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷின் பேசும் ஒலிப்பதிவு ஒன்று கேரள ஊடகங்களில் வலம் வருகிறது. அதில் தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் தரவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், கடந்த 6ம் தேதியில் இருந்து அமலாக்குத்துறையின் குற்றச்சாட்டு நகலை படிக்கவிடவில்லை.

படிக்கும் முன்பாகவே பக்கங்களை புரட்டிவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் அரபு நாடுகளுக்கு சிவசங்கரனுடன் சென்றபோது, முதல்வருக்காக பேரம் பேசியதாக அந்த வாக்குமூலத்தில் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அந்த வாக்குமூலத்தை ஒப்புக்கொண்டால் வழக்கில் அப்ரூவராக மாற வாய்ப்பு அளிக்கப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறுகிறார். எனது வழக்கறிஞர் மூலமாகவே எனக்கு அழுத்தம் தருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அழுத்தம் தரப்படுகிறது என்று குற்றம்சாட்டியிருந்தாலும், அதற்கு காரணமானவர்கள் யார் என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவிக்கவில்லை.


Tags : Confession crisis ,Binarayi Vijayan ,Swapna Suresh ,jail , Gold smuggling, First Pranay Vijayan, Confession, Swapna Suresh
× RELATED கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின்...