மதுரை: உதகை, கொடைக்கானல் பகுதிகளில் அவசர மருத்துவ வான்வழி ஆம்புலன்ஸ் வசதி தற்போது உள்ளதா? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆம்புலன்ஸ் சேவை இல்லை எனில் எப்போது ஏற்படுத்தப்படும், மேலும் ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பதில் தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.