மதுரை: அரசு ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக்கிளை தெரிவித்துள்ளது. அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கமிஷனுக்காக நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மிகச்சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றும் ஓட்டுனர்களை பாராட்டுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.