×

தொடர்ந்து 47வது நாளாக தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு : நாட்டில் கொரோனாவில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை 94%-ஐ நெருங்கியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.31 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 89 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 45.576 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 89,58,484 ஆக உயர்ந்தது.
* புதிதாக 585 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,31,578 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 48,493 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 83,83,602 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,43,303 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 93.58% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.95% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,28,203 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 12,85,08,389 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : returnees ,Corona ,country , India, Healing, Corona, Health
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...