×

தேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக சுருளி அருவியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஹைவேவிஸ், இரவங்கல்லாறு, மணலாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்வதால் அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு செல்வதற்கு தடை உள்ளது.


Tags : Theni ,Suruli Falls , Theni district floods for the 2nd consecutive day at Suruli Falls
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்