திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அடுத்த பெரியநாக பூண்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சுலோச்சனா. இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சீட்டு கட்டியுள்ளனர். இந்நிலையில் ஏலம் எடுத்தவர்களுக்கு ₹5 லட்சம் சீட்டு பணம் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் ஆடு, மாடுகளை மேய்க்கும் கூலித் தொழிலாளி கார்த்திகா மற்றும் பாதிக்கப்பட்ட சிலர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.