×

சிங்கபெருமாள் கோயிலில் பயங்கரம் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை

* முன்விரோதத்தில் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் * 5 பேர் போலீசில் சரண்

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் ஜெஜெ நகரை சேர்ந்தவர் பாபு (எ) குண்டுபாபு (24). பிரபல ரவுடி. இவர் மீது, ஒரு கொலை உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது பாபு, அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமேஸ்வரி (20). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பாபு, வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். சென்னை  - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற 7 பேர், திடீரென பாபுவை சுற்றிவளைத்தனர்.இதை பார்த்து உஷரான அவர், அங்கிருந்து ஓடினார். உடனே அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாபுவின் தலையில் வெட்டினர். அதை சுதாரித்து கொண்ட அவர், வேகமாக ஓடி சென்று, அங்குள்ள ஒரு கடைக்குள் புகுந்தார். ஆனால், மர்மநபர்கள், அவரை விரட்டி சென்று, அவரை சரமாரி வெட்டினர். இதில், பாபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

தகவலறிந்து எஸ்பி கண்ணன், டிஎஸ்பி ரவிச்சந்திரன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், பாபுவும் சிங்கபெருமாள் கோயில் ஜெஜெ நகரை சேர்ந்த பிரபல ரவுடி பரணியும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நடந்த ஒரு பஞ்சாயத்துக்கு காரணமாக அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டு முன் விரோதம் உருவானது. அதன்பிறகு யார் தாதா என்பதில் அவர்களுக்குள் அடிக்கடி உரசல் ஏற்பட்டுவந்தது.இதையடுத்து, நேற்றுமுன் தினம் பாபு, சிங்கபெருமாள் கோயில் பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது அவரது நண்பர் அன்பு அவ்வழியாக வந்துள்ளார். அவரை அழைத்த பாபு, டீ வாங்கி கொடு என கேட்டுள்ளார்.அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த ரவுடி பரணி, தன்னைத்தான் டீ வாங்கி வரச்சொல்கிறார் என நினைத்து, குண்டுபாபுவிடம் தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, சரமாரி தாக்கிக்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து சென்ற பரணி, ‘‘என்னை அவமானப்படுத்திய உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’’ என கூறிவிட்டு சென்றுள்ளார். இதன்பிறகு பரணி அவரது நண்பர்கள் சரத், கார்த்திக், ஆரி, முருகன், முத்து, சுரேஷ் ஆகியோருடன் வந்து பாபுவை வெட்டி கொலை செய்தனர் என தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
ரவுடி பரணி மீது சிங்கபெருமாள் கோயில் பகுதி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வேலு கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.இந்தவேளையில், பாபு கொலை வழக்கு தொடர்பாக, மறைமலைநகர் போலீசில், அதேபகுதியை சேர்ந்த பரணி, சொரி கார்த்திக், அனிஷ், ஒட்ட கார்த்திக், சரத்குமார் ஆகியோர் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரித்தனர். அதில், நிலத்தகராறு  மற்றும் முன்விரோதம் காரணமாக பாபுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.    



Tags : death ,Singaperumal , Terrible at Singaperumal Temple Famous Rowdy volley cut and killed
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...