குப்வாரா: ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ரோஷன் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவு 8 மணி அளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். கடந்த மே மாதம் நடந்த இதுபோன்று நடந்த பனிச்சரிவு சம்பவத்தில் ராணுவ அதிகாரி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.