×

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு தாக்கல்: பொதுமக்கள் 12 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கக்போரா பகுதியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகள் தற்போது குவிக்கப்பட்டுள்ளன.

Tags : civilians ,grenade attack ,security forces ,Jammu ,Kashmir , Blast
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு