×

கோவில்பட்டி பகுதியில் மழை: அரசு பஸ்சில் மழைநீர் குடை பிடித்த பயணிகள்

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல  அரசு பஸ்சில் வழக்கம்போல் பயணிகள் சென்றனர். அப்போது  அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்காங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழை நீர் பஸ்க்குள் புகுந்தது. இதனால் பஸ் முழுவதும் மழைநீரும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் முன்னெச்சரிக்கையா குடையுடன் பயணித்த பயணிகள் சிலர், குடை பிடித்தபடி பஸ்சில் பயணம் செய்தனர்.

மேலும் டிரைவர் இருக்கை பகுதியிலும் அதிகமான மழை நீர் உள்ளே வந்து கொண்டு இருந்த காரணத்தினால் டிரைவரும் வேறு வழியில்லமால் ஒரு கையில் குடையை பிடித்தவாறு பஸ் இயக்கினார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற சேதமடைந்த பஸ்களை சீரமைக்க வேண்டும், அல்லது மாற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டி நிலை ஏற்பட்டு விடும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : area ,Passengers ,Kovilpatti , Kovilpatti, Government Bus
× RELATED வாட்டி வதைக்கும்...