பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா செலுத்திய அபாரதத் தொகையை ஏற்றதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா சார்பில் நேற்று ரூ.10 கோடி அபராதம் செலுத்தப்பட்டதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தகவல் அளித்துள்ளது. ரூ.10 கோடி அபராதம் கட்டியதற்கான ரசீது பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு இன்று அனுப்பப்பட்டது.