பெரியகுளம், : தேனி மாவட்டம், பெரியகுளம் நகர், ஒன்றிய திமுக ஊழியர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில், ‘‘பெரியகுளத்தை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நெளிவு, சுளிவு தெரிந்தவர். நல்ல சாணக்கியன். பதவிக்காக முதலில் டிடிவி, பின்னர் ஜெயலலிதா, அதன் பின்னர் சசிகலா, தற்போது அமித்ஷா என்று யாரையேனும் பிடித்து பதவியை தக்க வைத்துக் கொள்கிறார்.
பதவிக்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவர். அவர் தேனி மாவட்டத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிக்க வேண்டும். தற்போது அமித்ஷா சென்னை வருவதை அறிந்து அனைத்து அமைச்சர்களும் மிகுந்த பயத்தில் உள்ளனர். அதிமுகவின் அனைத்து அமைச்சர்களின் ஊழல் பட்டியலும் அமித்ஷா கையில் இருக்கிறது. எனவே அவசியம் அதிமுக பாஜகவுடன் தான் கூட்டணி அமைப்பார்கள். அவ்வாறு அவர்கள் கூட்டணி அமைத்தால் அது நமக்கு சாதகமாக அமையும்’’ என்றார்.