மதுரை: விருதுநகர் வைப்பாறு உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் சட்டவிரோத குவாரிகள் நடைபெறுகிறதா? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டவிரோத குவாரிகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தனர். மேலும், வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.