மும்பை: மும்பை தலோஜா சிறையில் உள்ள கவிஞர் வரவர ராவை மருத்துவனையில் சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பை நானாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரவர ராவின் உடலை முழுமையாகப் பரிசோதிக்கவும் மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சை தரவும் ஆணையிட்டுள்ளது. கவிஞர் வரவர ராவை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மருத்துவமனையிலிருந்து சிறைக்கு மாற்றக்கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளது.