அந்தியூர்: அந்தியூரில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பழனி துப்பாக்கிச் சூடு சம்பவ எதிரொலியாக அந்தியூர் காவல்சரகத்தில் துப்பாக்கி உள்ளவர்களுக்காக கூட்டம் நடைபெற்றது. குடத்தில் பர்கூர், வெள்ளி திருப்பூர் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு காரணங்கள் தவிர சொந்த பிரச்சனைகளுக்கு துப்பாக்கி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.