சென்னை: தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 22ம் தேதி கோவை கருமத்தம்பட்டியில் மாபெரும் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது, மேலும் அன்று மாலை 5.30மணிக்கு ஏர் கலப்பை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார். இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேரணி அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.