×

தொடர்ந்து 46வது நாளாக தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு : நாட்டில் கொரோனாவில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை 94%-ஐ நெருங்கியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 89 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 38,617 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  89,12,908 ஆக உயர்ந்தது.
* புதிதாக 474 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,993 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 44,739 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை  83,35,110 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,46,805 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 93.52% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.01% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 9,37,279 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 12,74,80,186 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : recovery ,returnees ,Corona ,country , India, Corona, Number
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...