சென்னை: தென்தமிழகத்தில் ஏற்கனவே கனமழை பெய்துவரும் நிலையில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.