×

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக தூத்துக்குடியில்தான் 170 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் நேற்று புதியதாக ஒரு  காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

அது மேலும் வலுப்பெற்று இன்று வட மற்றும் வட கிழக்கு திசையில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்  காரணமாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.



Tags : districts , Heavy rain in southern districts It is raining
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை