சின்னாளபட்டி: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனுநீதி நாள் நடந்து வருகிறது. ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திரிகின்றன.
இவை மனு நீதி நாள் முகாமில் மனு கொடுக்க வரும் பொதுமக்களை விரட்டுவதுடன், அவ்வப்போது கடித்து வருகின்றன. நாய்க்கடிக்கு பயந்து மனுநீதி நாள் முகாமில் கலந்து கொள்ள பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தாலுகா அலுவலக வளாகத்தில் திரியும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.