×

உ.பி.யில் தொடரும் வக்கிரம்!: 50 குழந்தைகளை 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியரை கைது செய்தது சி.பி.ஐ..!!

லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு ஊழியரை கைது செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் இருப்பிடமாகவே உத்திரபிரதேசம் மாறி வருகிறது என்றே குறிப்பிடலாம் . கடந்து சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 20 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளர் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாண்டா மாவட்டத்தில் நீர்பாசனத்துறை பொறியாளரை கைது செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்ததாக புகார் எழுந்தது. சித்ரகூட், பாண்டா, ஹரிம்பூரில் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், குழந்தைகளுக்கு தெரியாமல் ரகசியமாக எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பொறியாளர் இணையதளதளங்களுக்கு விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கைதான பொறியாளரிடம் இருந்து 8 செல்போன்கள், ரூபாய் 8 லட்சம் பணத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்கள் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவது யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : servant ,arrests ,CBI ,children , UP, 50 child, 10 years, sexual abuse, civil servant, arrested
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...