சென்னை : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். முன்னதாக சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை அண்ணா பல்கலை.யில் நிகழ்ந்த பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து புகார்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை. முறைகேடு தொடர்பாக ஆதாரம் உள்ளவர்கள் நேரில் புகார் அளிக்கலாம் என்றும் விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் குறிப்பிட்டுள்ளார்.