×

உத்தரப் பிரதேசத்தில் 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு ஊழியரை கைது செய்தது சிபிஐ!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு ஊழியரை சிபிஐ கைது செய்தது. பாண்டா மாவட்டத்தில் நீர்பாசனத்துறை பொறியாளரை சிபிஐ கைது செய்தது.கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு செய்துள்ளார்.ரகசியமாக எடுக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை இணையதளங்களுக்கு பொறியாளர் விற்பனை செய்துள்ளார்.சித்ரகூட், ஹிரம்பூரில் 5 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.கைதான பொறியாளரிடம் இருந்து 8 செல்போன்கள், ரூ. 8 லட்சம் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்தது.


Tags : arrests ,CBI ,servant ,children ,Uttar Pradesh , Uttar Pradesh, sexual harassment, civil servant, arrested
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...