×

செல்வமுருகன் விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தும் தவறு இழைத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி மறுக்கிறார் : வேல்முருகன் சாடல்

சென்னை : விருதாச்சலத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன், 4ம் தேதி உயிரிழந்தார். அவரை காவலர்கள் தான் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், செல்வமுருகன் மீது பொய் வழக்குப்போடப்பட்டது. அவர் ஒரு வழிப்பறி திருடன் அல்ல, வளர்ந்து வரும் கிராம தொழிலதிபர். செல்வமுருகன் மீது திட்டமிட்டு திருட்டு வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது, செல்வமுருகன் விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தும் தவறு இழைத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி மறுக்கிறார் என தெரிவித்தார். மேலும், நகைக்கடை ஒன்றில் செல்வமுருகனை காவலர்கள் மிரட்டும் சிசிடிவி காட்சியையும் வேல்முருகன் வெளியிட்டார்.


Tags : Edappadi ,Velmurugan Sadal ,Selvamurugan , Selvamurugan, Edappadi, denies
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...