சென்னை : சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதற்கு கூடுதல் ஆதாரம் கிடைத்து உள்ளது என்று பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். திராவிட மொழியை சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தியது உறுதி என மேற்கு வங்க மொழி அறிஞர் முகோபாத்தியாய் ஆய்வில் நிரூபணம் ஆனதை சுட்டிக் காட்டி, அருணன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த உண்மையை மறைக்கவே ஒரு குழுவை மோடி அரசு அமைத்துள்ளது என்றும் அதனால்தான் எம்பிக்கள் குழுவை கலைக்க கூறினர் என்றும் தெரிவித்தார்.