மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் கடற்கரையில் இன்று காலை இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய திமிங்கலத்தில் எடை 4 டன் இருக்கும் என்றும் அதன் நீளம் 12 அடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமிங்கலம் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினரும் கடலோர காவல்படையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.