திருமலை: ஏழுமலையானை தரிசிக்க சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி வந்துள்ளார்.திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் காரில் திருமலைக்கு வந்தார். அவரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனிராமய்யா, தேவஸ்தான அதிகாரி பிரபாகர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேள தாளங்கள் முழங்க முதல்வர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றிரவு திருமலையில் தங்கிய அவர், இன்று சுவாமி தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து இன்றே சென்னைக்கு திரும்புகிறார்.