×

ஐ.டி ஊழியர் வீட்டை உடைத்து 12 சவரன், 70 ஆயிரம் கொள்ளை

ஆவடி: ஆவடி, தேவி நகர், முத்துகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (33). ஐ.டி.நிறுவன  ஊழியர்.  இவரது மனைவி கிரிஜா.  இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், இவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஜெகதீஸ்வரன் வீட்டை பூட்டி விட்டு மனைவி,  குழந்தைகளுடன் குரோம்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர், அவர் மீண்டும் குடும்பத்துடன் நேற்று மதியம் வீடு திரும்பினார்.  அப்போது வீட்டின் முன் கதவு திறந்துகிடந்தது.

அதிர்ச்சியடைந்த ஜெகதீஸ்வரன், மனைவி கிரிஜாவுடன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 12சவரன் நகைகள், 70ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி  வருகின்றனர்.



Tags : IT employee ,house , IT employee broke into the house 12 shaving, 70 thousand robbery
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்