திருவொற்றியூர்: மணலி ராஜதோட்டம் பகுதியை சேர்ந்த ராம்குமார் (50), செல்போனுக்கு கடந்த 13ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதை இவரது மனைவி எடுத்து பேசினார். அதில், ‘‘நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளர் பேசுகிறேன். புதிதாக வாங்கிய டெபிட் கார்டு ரகசிய குறியீடு எண்ணை கூறுங்கள்’’ என்றுள்ளார்.
அதன்படி, கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் ஓடிபி எண் வந்துள்ளது. அதையும் தெரிவித்துள்ளார். பின்னர், ராம்குமார் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 4500 எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த அவர், வங்கியில் விசாரித்தபோது, அவர்கள் ஓடிபி எண்ணை கேட்கவில்லை என தெரியவந்தது. புகாரின்பேரில் மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.