கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, குணா குகைகள், பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு இன்று முதல் திறக்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவது சுற்றுலாப்பயணிகள், வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.