×

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்று உறுதி: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமாகா தலைவர் ஜிகே வாசன் ஞானதேசிகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஞானதேசிகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எந்த தகவலும் அறிவிக்கவில்லை. எனவே  ஞானதேசிகனுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஏதேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Gnanadesikan ,State ,Congress Party ,Apollo Hospital , Gnanadesikan, Corona, Infection Confirmed:, Apollo Hospital
× RELATED பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து...