×

பிகார் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் ஆர்ஜேடி கட்சியினர் புறக்கணிப்பு

பாட்னா: பிகார் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது. பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மூத்த தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது.

பீகார் முதலமைச்சராக தற்போது நிதிஷ் குமார் பதவியேற்கிறார். விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றுள்ளனர். அவர்கள் முன்னிலையில் நிதிஷ் குமார் பதவியேற்கிறார். நிதிஷ் குமாருடன் 14 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைகிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : RJD ,inauguration ,Nitish Kumar ,Bihar Governor's House , Bihar, Nitish Kumar, inauguration, RJD, boycott
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை