திருவனந்தபுரம்: கேரளாவில் 8 மாவட்டங்களில் வரும் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களுக்கும் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.